பதிவு செய்த நாள்
18 டிச2017
00:09
தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, கடந்த வாரம், 30 புள்ளிகள் அதிகரித்து, 10 ஆயிரத்து, 333 என்ற அளவில், வியாபாரம் முடிவுற்றது. நவம்பரில், சந்தை சரிவில் இருந்தது. பின், இம்மாதம் ஏற்றத்தை சந்தித்தது. சர்வதேச சந்தைகள், தொடர்ந்து வரலாற்று உச்சம் கண்டு வரும் சூழலில், அதன் எதிரொலி, நம் சந்தையிலும் காணப்பட்டது. அதனால், நம் சந்தை வீழ்ச்சி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த வாரம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வர உள்ளன. குஜராத்தில், ஆளுங்கட்சியான, பா.ஜ., 125 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனில், பங்குச் சந்தைக்கு, அது மிக சாதகமாக அமையும். இது, மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்துக்கு வழிவகுக்கும். அதே சமயம், கருத்துக் கணிப்புகளை ஒட்டி, 105 – 116 இடங்களில் மட்டும் வெற்றி எனும்பட்சத்தில், அது, சந்தையில் பெரிதாக சாதகமான சூழலை உருவாக்காது. மேலும், வரவிருக்கும் லோக் சபா தேர்தலில், பா.ஜ., நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
லோக்சபா தேர்தல், 2019ல் நடைபெற இருப்பதால், 2018ல், மத்திய அரசு புதிய கொள்கைகளையும், பொருளாதார முன்னேற்ற திட்டங்களையும் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, சந்தையில் உள்ளது.கடந்த, 2016 நவம்பரில், பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் நடைபெற்ற, உ.பி., தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்கு பின், குஜராத்திலும் வெற்றி கிடைத்தால், ஆளுங்கட்சிக்கு ஆதரவு பெருகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே, பங்குச் சந்தையின் போக்கில் அரசியல் முடிவுகள், நிலைத்தன்மை, ஏற்றுமதி – இறக்குமதி கொள்கைகள், பணவீக்கம், பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட, பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குஜராத்தில், தேர்தலில் கணிப்புகளுக்கு எதிராக, ஏதேனும் நிகழும் நிலையில், சந்தையில் சரிவு நேர வாய்ப்பு உள்ளது. சராசரிக்கு குறைவாக அதாவது, 92 அல்லது அதற்கு கீழே கிடைக்கும்பட்சத்தில், அது சந்தைக்கு பாதகமாக அமையும். இந்த வாரத்தை பொறுத்தவரை, 10,490 முதல் இலக்காகும். அதை கடந்தால், 10,650 ஆகும். சப்போர்ட், 10,100 மற்றும், 10,020 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்மிர்ஸா இன்டர்நேஷனல், எம்பி இந்தியா, துவாரகேஷ் சுகர், வொண்டர்லா ,மாருதி
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|