பதிவு செய்த நாள்
19 டிச2017
00:29
புதுடில்லி : வலைதள சந்தை நிறுவனமான, இந்தியா மார்ட், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தினேஷ் கூறியதாவது: நான் உட்பட, இதர நிறுவனர்களும், இந்தியா மார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிதி நிறுவனங்களும், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக, பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளோம். நிறுவனம், வலைதளம் வாயிலாக, தயாரிப்பாளர் – நுகர்வோர் இடையே பாலமாக செயல்பட்டு, தரகு கட்டணம் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
டாடா, மஹிந்திரா, கோத்ரெஜ் போன்ற பெரிய குழுமங்கள், இந்தியா மார்ட் வாடிக்கையாளர்களாக உள்ளன. இது போன்ற பெரிய நிறுவனங்கள் மூலம், ஆண்டுக்கு, தலா, 4 லட்சம் ரூபாய் வீதம் வருவாய் ஈட்டுகிறோம். சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து, ஆண்டுக்கு தலா, 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்தியா மார்ட் நிறுவனத்திடம், 40 லட்சம் சிறிய, நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்கள் உள்ளனர். வலைதளத்தில், 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|