ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்: நிறுவனங்களுக்கு புதிய வசதிஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்: நிறுவனங்களுக்கு புதிய வசதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.17 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.17 ...
குடியிருப்பு விலை உயர ஜி.எஸ்.டி., காரணம்? ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ‘கிடிக்கிப்பிடி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2017
00:36

புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யை காட்டி, குடி­யி­ருப்­பு­களின் விலையை உயர்த்தி உள்ள, ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­களை ஆய்வு செய்து, தவறு செய்­வோர் மீது நட­வ­டிக்கை எடுக்க, கொள்ளை லாப தடுப்பு ஆணை­யம் திட்­ட­மிட்டு உள்­ளது.

இது குறித்து, பெயர் குறிப்­பிட விரும்­பாத, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கட்­டு­மா­னத்­தில் உள்ள வீடு­க­ளுக்கு, 12 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி உள்­ளது. மேலும் இந்­நி­று­வ­னங்­கள், கட்­டு­மா­னத்­தின் போது பயன்­ப­டுத்­தும் மூலப்­பொ­ருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற­வும், ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் வகை செய்­யப்­பட்டு உள்­ளது.

தற்­போது, கட்­டு­மா­னத்­தில் உள்ள குடி­யி­ருப்­புக்கு, ஏற்­க­னவே, மூலப்­பொ­ருட்­க­ளுக்கு செலுத்­திய, 18 சத­வீத வரி­யில், உள்­ளீட்டு வரி பயன் கிடக்­கிறது.அதா­வது, செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை விட, கூடு­தல் வரு­வாய் அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு கிடைக்­கிறது. ஜூலைக்கு முந்­தைய வரி நடை­மு­றை­யில், கட்­டு­மா­னத்­தில் உள்ள குடி­யி­ருப்­பின் மதிப்­பில், 30 சத­வீ­தத்­திற்கு, 15 சத­வீ­தம் சேவை வரி விதிக்­கப்­பட்­டது. இதன்­படி, 4.5 சத­வீத சேவை வரி­யும், மாநில அர­சு­களின், 4.5 சத­வீத, மதிப்பு கூட்டு வரி­யும் சேர்த்து, மொத்­தம், 9 சத­வீத வரி மட்­டுமே, வீடு வாங்­கு­வோர் செலுத்த வேண்டி இருந்­தது.

அதே சம­யம், முந்­தைய வரி விதிப்­பில், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, உள்­ளீட்ட வரி பய­னில்லை என்­பதை, கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். ஆனால், ஜி.எஸ்.டி.,யில், உள்­ளீட்டு வரிச்­ச­லு­கை­யு­டன் இணைந்த, 12 சத­வீத வரி விதிக்­கப்­ப­டு­கிறது. அத­னால், பழைய நடை­மு­றையை விட, ஜி.எஸ்.டி.,யில், வரிச்­சுமை குறை­வா­கவே உள்­ளது. இந்த வகை­யில், கிடைக்­கும் உள்­ளீட்டு வரி பயன் சார்ந்த லாபத்தை, கட்­டு­மான நிறு­வ­னங்­கள், குடி­யி­ருப்­பு­களை வாங்­கு­வோ­ருக்கு அளிக்க வேண்­டும். வீடு­க­ளுக்­கான மாதத் தவ­ணையை குறைக்க வேண்­டும். அவ்­வாறு செய்­யா­மல், சில கட்­டு­மான நிறு­வ­னங்­கள், மூலப்­பொ­ருட்­கள் செலவு உயர்ந்­துள்­ள­தாக கூறு­கின்றன.

மேலும், குடி­யி­ருப்­பின் விலையை அதி­க­ரிக்க, வர்த்­தக நிலைப்­பாட்டை மாற்­றிக் கொண்­ட­தாக கூறி, வீடு வாங்­கு­வோ­ரி­டம் கூடு­தல் தொகையை வசூ­லிப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. இப்­பு­கார்­களை விசா­ரிக்க, கொள்ளை லாப தடுப்பு ஆணை­யம் திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், குடி­யி­ருப்பு விலையை உயர்த்­தி­ய­தற்கு நியா­ய­மான, திருப்­தி­யான கார­ணங்­கள் இல்­லா­த­பட்­சத்­தில், கட்­டு­மான நிறு­வ­னங்­கள் மீது, அப­ரா­த­மு­டன் கூடிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். கூடு­த­லாக வசூ­லித்த வரியை, வட்­டி­யு­டன், குடி­யி­ருப்பு உரி­மை­யா­ள­ருக்கு திரும்ப வழங்­க­வும், கட்­டு­மான நிறு­வ­னங்­களின், ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்­ய­வும் முடி­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

லாப பகிர்வு:
கட்­டு­மான நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., பயனை, நுகர்­வோ­ருக்கு வழங்­கு­வ­தில்லை. அந்­நி­று­வ­னங்­கள் பெறும் உள்­ளீட்டு வரி பய­னில், சிறி­த­ள­வா­வது குடி­யி­ருப்பை வாங்­கு­வோ­ரு­டன் பகிர்ந்து கொள்ள வேண்­டும்.
-அபிஷேக் ரஸ்தோகி, பங்குதாரர், கேதான் அண்டு கோ

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)