பதிவு செய்த நாள்
25 டிச2017
02:54
தனிநபர்கள் மத்தியில் நிதிச்சொத்துகளில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. ‘கார்வி இந்தியா வெல்த்’ அறிக்கை, 2017ம் ஆண்டில் தனிநபர்களின் வளம், 344 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
முந்தைய ஆண்டு இது, 310 லட்சம் கோடியாக இருந்தது. மேலும், 2017ல் நிதிச்சொத்துகள் மீதான முதலீடு முன்னிலை வகிக்கிறது. பங்குச் சந்தையின் ஏற்றம், அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதற்கு காரணம் என கருதப்படுகிறது. நிதிச்சொத்துகளில் தனிநபர்கள் வளம், 14.63 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த பிரிவிலான முதலீடு, வைப்பு நிதி, பங்கு முதலீடு, காப்பீடு மற்றும் சேமிப்பு கணக்குகளில் செய்யப்பட்டுள்ளன. வைப்பு நிதி மற்றும் பத்திரங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளன. மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் வளர்ச்சி விகிதம், 39.21 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது, 12.95 சதவீதமாக இருந்தது. சராசரி முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|