பதிவு செய்த நாள்
16 ஜன2018
01:14
கோழிக்கோடு:பிரபல நகைக் கடைகளில் ஒன்றான, மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம், கத்தார், ஓமன், மலேஷியா உட்பட ஆறு நாடுகளில், 11 புதிய ஷோரூம்களை துவக்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனரான, ஷாம்லால் அஹமது கூறியதாவது:தற்போது, மலபார் கோல்டு, 197 ஷோரூம்களை கொண்டுள்ளது. இதில், 90 ஷோரூம்கள், இந்தியாவிலும், 107 வெளிநாட்டிலும் உள்ளன. 2017ல் மட்டும், 27 ஷோரூம்கள் துவக்கப்பட்டு உள்ளன. உலகளாவிய விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக, உலகின் பல்வேறு நாடுகளில், 50 ஷோரூம்களை, நடப்பு ஆண்டில் துவக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இது குறித்து, இந்நிறுவனத்தின், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர், ஓ அஷெர் கூறுகையில், ‘‘மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், நாட்டில் அதிக ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளை அமைக்க, குழுமம் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும்,’’ என்றார்.
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, மலபார் குழுமத்தின் ஓர் அங்கமாகும். சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள, 11 புதிய ஷோரூம்களையும் சேர்த்து, மொத்தம் உலகளவில், 208 ஷோரூம்கள் கொண்ட நிறுவனமாக மாறி இருக்கிறது, இந்நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|