பதிவு செய்த நாள்
18 ஜன2018
00:35
புதுடில்லி : ‘‘அடுத்த, 8 – 9 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி காணும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
டில்லியில், இணைய நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., நிகழ்ச்சியில், அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: தயாரிப்புத் துறை மட்டும், முழுமையாக, ‘டிஜிட்டல்’ மயமானால், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய அளவில் வர்த்தக வாய்ப்புகள் கிட்டும். அனைத்து துறைகளிலும், தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் பணியில், வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த, 8 – 9 ஆண்டு களில், இந்தியாவின் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலராக உயரும். அதில், தயாரிப்புத் துறையின் பங்கு மட்டும், 20 சதவீதமாக இருக்கும்.
அதனால், தயாரிப்புத் துறை வளர்ச்சிக்கு முழுமையான செயல் திட்டத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மதிப்பீட்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் பிரிவின் பங்கு, 60 சதவீதமாக இருக்கும். தயாரிப்பு மற்றும் சேவை துறைகளிள் சர்வதேச வர்த்தகத்தை, 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|