பதிவு செய்த நாள்
19 ஜன2018
05:36
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி நதியில் புதுமையான, ‘சூப்பர் மார்க்கெட்’ வணிகம், 2019ல் துவங்க உள்ளது.கோல்கட்டாவைச் சேர்ந்த, திருப்பதி வான்காம் நிறுவனத்தின் துணை நிறுவனம், திருப்பதி வெசல். இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் முதலீட்டில், புதுமையான மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.திரையரங்குபிரமாண்ட படகில், பல வகையான பொருட்களை விற்கும் கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள்,‘மல்டிபிளக்ஸ்’ திரையரங்குகள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் இடம் பெறும்.ஹூக்ளி நதி வழியே, பல முக்கிய நகரங்களுக்கு இந்த படகு செல்லும்.ஆங்காங்கே உள்ள மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும், புதிய அனுபவத்தை அளிப்பதாகவும், இந்த மிதக்கும் சூப்பர் மார்க்கெட் இருக்கும் என, திருப்பதி வெசல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது போல, இரண்டு பிரமாண்ட படகுகளை, ஹூக்ளி நதியில் விட, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.வாகன போக்குவரத்துஇத்துடன், 150 கோடி ரூபாய் முதலீட்டில், ஹூக்ளியில், பிரமாண்ட படகுகள் மூலம், வாகன போக்குவரத்து சேவை மேற்கொள்ளவும், திருப்பதி வெசல் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|