பதிவு செய்த நாள்
19 ஜன2018
10:14
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் (ஜன.,19) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடனேயே காணப்படுகிறது. ஏற்மதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை விற்பது அதிகரித்து வருவதால், தொடர்ந்து 3 வது நாளாக இன்று இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் காணப்படும் தொடர் உயர்வின் காரணமாக மற்ற நாடுகளின் கரன்சியும், இந்திய ரூபாய்க்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் மற்ற நாடுகளின் கரன்சிக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து 63.70 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 63.86 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|