பதிவு செய்த நாள்
20 ஜன2018
00:31
புதுடில்லி : ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், காற்றுப் பை கோளாறு காரணமாக, 22,834 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, 2013ல் விற்பனை செய்யப்பட்ட, ‘அகார்டு, சிட்டி, ஜாஸ்’ மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிய காற்றுப் பைகள் பொருத்தி தரப்பட உள்ளன. இதில், 22,084 கார்கள், ‘சிட்டி’ மாடல் ஆகும். ‘நாடு முழுவதும் உள்ள முகவர்கள் மூலம், கார்களில், புதிய காற்றுப் பைகள் இலவசமாக பொருத்தி தரப்படும்’ என, ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த, டகாடா கார்ப்பரேஷன் நிறுவனம், ஹோண்டா கார்களுக்கு காற்றுப் பைகளை தயாரித்து அளித்துள்ளது. இவை, விபத்தின் போது தன்னிச்சையாக விரிவடைந்து, பயணியரை பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. டகாடாவின் காற்றுப் பைகள், விரிவடைவதில் பிரச்னை ஏற்பட்டதால், உலக அளவில் விற்பனை செய்த கார்களை, ஹோண்டா திரும்பப் பெற்று, புதிய காற்றுப் பை பொருத்தி தருகிறது.
இந்தியாவில், இத்துடன் கோளாறு காரணமாக, புதிய காற்றுப் பை பொருத்தி தரப்படும் கார்கள் எண்ணிக்கை, 3.13 லட்சமாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|