பதிவு செய்த நாள்
21 ஜன2018
04:36
புதுடில்லி : டாடா ஸ்டீல் நிறுவனம்,அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு, 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான, உரிமை பங்குகளை வெளியிடுகிறது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், அதன் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்ட, உரிமை பங்குகளை வெளியிடுவது என, முடிவு செய்து உள்ளது. இதற்கு, நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இதையடுத்து, சாதாரண பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களை வெளியிட்டு, 12,800 கோடி ரூபாய்க்கு மிகாமல் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதில், 15.53 கோடி அளிக்கப்பட்ட சாதாரணபங்குகள் வாயிலாக, 8,000 ரூபாய்க்கு மிகாமல் திரட்டப்படும். இதே போல, 7.76 கோடி அளிக்கப்பட்ட சாதாரண பங்குகள் மூலம், 4,800 கோடி ரூபாய்க்கு மேற்படாத தொகை திரட்டப்படும்.தற்போதுள்ள நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள், இப்பங்கு வெளியீட்டில் பங்கேற்கலாம்.இப்பங்கு வெளியீடு, பிப்., 14ல் துவங்கி, 28ல் முடிவடையும். சாதாரணபங்கு ஒன்றின் முக மதிப்பு, 10 ரூபாய். பதிவு தேதி உள்ளிட்ட விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும்.உரிமை பங்கு வெளியீட்டு ஆவணங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கும் அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|