பதிவு செய்த நாள்
23 ஜன2018
01:06
டாவோஸ் : ‘‘இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற சீர்திருத்த நடவடிக்கைகளை, சர்வதேச பொருளாதார மாநாட்டில் எடுத்துக் கூற, பிரதமர் மோடியைத் தவிர பொருத்தமானவர் வேறு யாரும் இல்லை,’’ என, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில், 20 ஆண்டுகளுக்கு பின், இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது, மிகப் பெரிய நிகழ்ச்சியாகும். ஜி.எஸ்.டி., உட்பட, எண்ணற்ற சீர்திருத்தங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.
வங்கி திவால் சட்டம், அனைத்து துறைகளும், ‘டிஜிட்டல்’ மயம் என, பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக வங்கியின், சுலபமாக தொழில் செய்யும் நாடுகளின் வரிசையில், இந்தியா, 42வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இத்துடன், அதிக இளைஞர்களுடன், பிரமாண்ட சந்தை வாய்ப்பு உள்ள, 130 கோடி மக்களின் வளர்ச்சி கதையும் உள்ளது. இதையெல்லாம், இம்மாநாட்டில் எடுத்துக் கூற, மோடியைத் தவிர, பொருத்தமானவர் வேறு யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|