பதிவு செய்த நாள்
10 பிப்2018
00:39
புதுடில்லி:பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், இளம் திறமைசாலிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, சி.ஐ.ஐ., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
கல்வி கற்ற உடன் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து, நாடு முழுவதும், 5,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.மக்கள் தொகையில், வேலை பார்ப்போர் விகிதம், 2014ல், 33 சதவீதமாக இருந்தது. இது, நடப்பாண்டில், 45.60 சதவீதமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
பாரம்பரியமான கல்வி பயின்றோரை விட, தொழிற்கல்வி பயில்வோருக்கு, அதிகளவில், உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.இதற்கு, கல்வி பயிலும்போது, செயல்முறை பயிற்சி, ‘இன்டர்ன்ஷிப்’பயிற்சி ஆகியவை கிடைப்பதே காரணம்.
எம்.பி.ஏ., கல்லுாரிகள் பெருக்கம் காரணமாக, கல்வி போதிப்பு திறன் குறைவாக உள்ளது.
அதனால், இக்கல்வி முடித்து வருவோருக்கான வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது.
மத்திய அரசு, மாணவர்களிடையே திறன் மேம்பாட்டை அதிகரிக்க மேற்கொண்டு வரும்
திட்டங்களால், திறமைசாலிகளுக்கு, தற்போதுவேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|