பதிவு செய்த நாள்
15 பிப்2018
00:33
வாஷிங்டன்:அமெரிக்காவின்,
ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியா அதிக வரி
விதித்துள்ளதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
அவர், உருக்கு துறை குறித்து, எம்.பி.,க்கள் கூட்டத்தில் பேசியதாவது:
அமெரிக்காவின்
ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு,
இந்தியாவில் இறக்குமதி வரி, 75 சதவீதத்தில் இருந்து, 50
சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது போதாது. முழுவதுமாக வரியை
நீக்க வேண்டும். இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மோட்டார்
சைக்கிள்களுக்கு, அமெரிக்கா வரி ஏதும் விதிப்பதில்லை. அதனால்,
இந்தியா சுங்க வரியை நீக்க வேண்டும்.
நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை, வெளிநாடுகளில் விற்க, அதிக அளவில் வரி செலுத்துகிறோம். ஆனால், வெளிநாடுகள், ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்களை, வரியின்றி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, வருவாய் பார்க்கின்றன.இந்த
போக்கு மாற வேண்டும். நான், இந்தியாவை குறை சொல்லவில்லை. ஆனால், இரு
நாடுகளின் வரி விதிப்பில், பரஸ்பரம் ஒத்த நடைமுறையை பின்பற்ற
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|