பதிவு செய்த நாள்
21 பிப்2018
00:26
புதுடில்லி : நாட்டின், எட்டு முக்கிய துறைகளில், மூன்று மாதங்களில், 64 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.
மத்திய தொழிலாளர் பிரிவு, 2017ல், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், முக்கிய எட்டு துறைகளில், வழக்கமான மற்றும் தற்காலிக பணிகளுடன், சுய வேலைவாய்ப்புகள் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: மதிப்பீட்டு காலாண்டில், கல்வி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறையில், 1.30 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கல்வித் துறையில் மட்டும், 99 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கூடுதலாகி உள்ளன. ஆரோக்கிய பராமரிப்பு துறையில், 31 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
புதிய வேலைவாய்ப்புகளில், இந்த இரு துறைகள், பெரும்பங்கை வகித்துள்ளன. அவற்றில், ஆண்களை விட, பெண்களே அதிக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். புதிய வேலைவாய்ப்புகளில், ஆண்களை விட, பெண்களின் பங்கு அதிகம் உள்ளது. இந்த வகையில், மதிப்பீட்டு காலாண்டில், நிகர அளவில், 51 ஆயிரம் பெண்கள் மற்றும், 13 ஆயிரம் ஆண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதே சமயம், தயாரிப்பு, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, ஓட்டல் மற்றும் உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும், பி.பி.ஓ., துறைகளில், நிகர அளவில், 66 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
15 மாதங்களில்:
கடந்த, 2016 – 17 ஏப்., – ஜூன் வரையிலான, 15 மாதங்களில், எட்டு முக்கிய துறைகளில், நிகர அளவில், 4.80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதில், கல்வி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளின் பங்கு, முறையே, 1.70 லட்சம் மற்றும், 1 லட்சம் என்ற அளவில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வேலைவாய்ப்பு, 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|