பதிவு செய்த நாள்
21 பிப்2018
00:28
மும்பை : வலைதளம் மூலம், சில்லரை விற்பனை சந்தை, 2021 வரை, ஆண்டுக்கு, 30 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு, வளர்ச்சி காணும் என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சிக்கு, இளவயதினர் காரணமாக இருப்பர் என்றும், அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
வணிக ஆலோசனை நிறுவனமான, ‘டெலாய்ட்’ ஆய்வறிக்கை: மொத்த சில்லரை விற்பனை சந்தையில், ‘ஆன் லைன்’ மூலம் விற்பனையானது, 2010ல் வளர்ச்சி பெற்று, 2015ல், 3 சதவீதம் என்ற அளவை எட்டியது. இது, இன்னும் வேகமாக வளர்ந்து, 30 சதவீதத்துக்கும் மேலான, கூட்டு விகித வளர்ச்சியை, 2016 – 21 வரையிலான காலத்தில் அடையும் என, எதிர்பார்க்கலாம். இதற்கு, பாரம்பரியமான முறையிலிருந்து, ஆன்லைன் முறைக்கு, இளவயதினர் மாறி வருவது முக்கிய காரணம். 18 – 35 வயதுடையவர்களின் எண்ணிக்கை, உலகளவில், இந்தியாவில் தான் அதிகம்.
இவர்கள் பொருட்களை வாங்க, இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை விட அதிகமாக, வளரும் நாடுகளில் இருக்கிறது. இளவயதினர், அவர்களுக்கு கிடைக்கும் ஊக்கத்தொகைகளில், 32.7 சதவீதத்தை, உணவகங்களுக்கும், பொழுதுபோக்குக்கும் செலவழிக்கின்றனர். ஆடைகள் உள்ளிட்டவற்றுக்கு, 21.4 சதவீதமும், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு, 11.2 சதவீதமும் செலவு செய்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|