பதிவு செய்த நாள்
24 பிப்2018
00:39
புதுடில்லி : ‘கடந்த, 2017ல், அக்., – டிச., வரையிலான, நான்காவது காலாண்டில், சர்வதேச ஸ்மார்ட் போன் விற்பனை, 4.6 சதவீதம் குறைந்துள்ளது’ என, ‘கார்ட்னர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையின் ஆய்வை, 2004ல் துவங்கியது. அதன்பின், முதன்முறையாக, மதிப்பீட்டு காலாண்டில் தான், ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு, இரு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களின் தரமும், குறைவாக உள்ளது. அதனால், பியூச்சர் போன் வைத்துள்ளோர், ஸ்மார்ட் போனுக்கு மாறுவது குறைந்துள்ளது.
சிறந்த தரத்தில் கிடைக்கும் பியூச்சர் போன்களை வாங்கவே, மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்து, ஸ்மார்ட் போனுக்கு மாறுவோர், தரமான சாதனங்களை தேர்வு செய்கின்றனர்; அவை நீடித்து உழைக்கின்றன. இத்தகைய காரணங்களால், 2017 அக்., – டிச., காலாண்டில், சர்வதேச ஸ்மார்ட் போன் விற்பனை, 2016 இதே காலாண்டை விட, 5.6 சதவீதம் சரிந்து, 40.80 கோடியாக குறைந்துள்ளது என, கார்ட்னர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|