பதிவு செய்த நாள்
03 மார்2018
00:21
சிங்கப்பூர்:‘‘இந்தியா, சர்வதேச நாடுகளுடன் வர்த்தக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், அதிகபட்ச தாராளமய கொள்கையை கடைபிடிக்கிறது,’’ என, மத்திய வர்த்தகம்மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.அவர், சிங்கப்பூரில், பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று, ‘இந்திய பொருளாதார சீர்திருத்தங்களும், சர்வதேச ஒருங்கிணைப்பும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
உலகில், அதிக அளவிலான தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. பாதுகாப்பு துறை உட்பட அனைத்து துறைகளிலும், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் வெகுவாக தளர்த்தப்பட்டு உள்ளன. அனைத்து நாடுகளுடன்,வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ளவும், ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், இந்தியா மிக ஆர்வமாக உள்ளது.
குறிப்பாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஆசியான்’ உடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறது. இந்த அமைப்பு மட்டுமின்றி, ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பிலும், அதிக பங்களிப்பை இந்தியா வழங்கும். இந்த அமைப்பு தொடர்பாக, இதர அண்டைநாடுகளுடன் கூட்டாக செயல்படவும் ஆர்வமாக உள்ளது.எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அண்டை நாடுகளுடன், பரஸ்பரம் மற்றும் பன்முக பரஸ்பர ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது தான், இந்தியாவின் முக்கிய நோக்கம்.
இதன் மூலம், இந்தியா உடன் சேர்ந்து பல நாடுகள்பயனடையும். இத்தகைய ஒப்பந்தங்களை இறுதி செய்வது கடினம் என்றாலும், அந்த முயற்சியில் பங்கேற்க, இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.சிங்கப்பூராக இருந்தாலும், ஆசியான் மற்றும், ஆர்.சி.இ.பி., உறுப்பு நாடுகளாக இருந்தாலும், எந்த பேச்சிலும், உள்நாட்டு நலனுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இது, இந்தியாவிற்கும் பொருந்தும்.
எனினும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதுஅவசியமாகும்.உலக வர்த்தக அமைப்பு, வெற்றிகரமாக, சர்வதேச வர்த்தகத்தை ஒருங்கிணைத்து உள்ளது. அது போல, நாம், பன்முக பரஸ்பர வணிகத்திற்கு, சர்வதேச அளவில், நவீன வர்த்தக செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.அது, உள்நாட்டு நலனை பாதிக்காத வகையில், சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் திட்டமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசியான் – ஆர்.சி.இ.பி.,
‘ஆசியான்’ எனப்படும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய, 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாக, ஆர்.சி.இ.பி., விளங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|