பதிவு செய்த நாள்
06 மார்2018
00:54
புதுடில்லி:‘‘சிறப்பு பொருளாதார மண்டல கொள்கைகளை சீரமைத்து, தேவையான மாற்றங்களை செய்யும் நோக்கில், உயர்மட்டக் குழு அமைக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, பார்லி.,யில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:நாட்டின் ஏற்றுமதியில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வகிக்கின்றன. இம்மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, நிதி மற்றும் நிதி சாரா சலுகைகள் வழங்கப்படுகின்றன. துணை ஒப்பந்தங்களை வழங்கவும், முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, நேரடி வரி மற்றும் மறைமுக வரிச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.இத்தகைய சூழலில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, ஏற்றுமதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சிறப்பு பொருளாதார மண்டல கொள்கைகளை சீரமைக்க, உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.இதே போல, ரப்பர் துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு குழு அமைத்து, தேசிய ரப்பர் கொள்கை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|