பதிவு செய்த நாள்
20 மார்2018
01:56
புதுடில்லி : ‘இந்தியாவில், 5 சதவீதம் பேர் மட்டுமே, சொந்தமாக தொழில் துவங்குகின்றனர்’ என, இ.டி.ஐ., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், 3,400 பேரிடம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், 18 வயதிற்கு மேற்பட்டோரில், 11 சதவீதம் பேர், தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதிலும், 5 சதவீதம் பேர் மட்டுமே, சுய தொழிலில் இறங்குகின்றனர். இது, உலகளவில் மிகக் குறைவாகும்.
அதேசமயம், தொழிலை கைவிடுவதில், இந்தியா, 26.4 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகளின் தொல்லையால், 1.3 சதவீதம் பேர், தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். நிதிப் பிரச்னையால், 7 சதவீதத்தினரும், லாபம் இல்லாததால், 16.9 சதவீதத்தினரும், தொழிலை இடையிலே கைவிடுகின்றனர்.
‘பிரிக்ஸ்’ நாடுகளில், தொழில் ஸ்திரத்தன்மையில், பிரேசில், மிக அதிக அளவாக, 17 சதவீதம்; தென் ஆப்ரிக்கா, மிகக் குறைவாக, 3 சதவீதத்தை கொண்டுள்ளன. இது, சீனாவில், 8 சதவீதம்; இந்தியா மற்றும் ரஷ்யாவில், தலா, 5 சதவீதம் என்ற அளவில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|