பதிவு செய்த நாள்
21 மார்2018
00:30
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பயணியர் வாகனங்களின் விலையை, ஏப்., 1 முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் பயணியர் வாகன பிரிவின் தலைவர், மாயங்க் பரீக் கூறியதாவது: நிறுவனம், பயணியர் வாகனப் பிரிவில், துவக்க விலையில், ஜென் எக்ஸ் நானோ காரை, 2.28 லட்சம் ரூபாயில் விற்பனை செய்கிறது; பிரீமியம், எஸ்.யு.வி., பிரிவில், ஹெக்சா காரை, 17.42 லட்சம் ரூபாயில் விற்பனை செய்கிறது. உள்ளீட்டு செலவு அதிகரிப்பு; சர்வதேச சந்தை நிலவரம் போன்றவற்றால், பயணியர் வாகனங்களின் விலையை, 60 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது, ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தாக்கல் செய்த, 2018 – 19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், வாகனங்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜெர்மனியைச் சேர்ந்த, பிரபல, ‘ஆடி’ கார் நிறுவனம், சமீபத்தில், அதன் வாகனங்களின் விலையை, ஏப்., 1 முதல், உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|