பதிவு செய்த நாள்
22 மார்2018
00:45
வாஷிங்டன் : இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதியாகும், ‘ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பிளாஞ்ச்’ பொருட்களுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: சீனா மற்றும் இந்தியாவில் இருந்து, குறைந்த விலையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளாஞ்சுகள் இறக்குமதி ஆவதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சீனா, 257.11 சதவீதம்; இந்தியா, 145.25 சதவீதம், விலை குறைவாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளாஞ்சுகளை ஏற்றுமதி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியா,சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளாஞ்சுகளுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களிடம், வரியை ரொக்கமாக வசூலிக்குமாறு, சுங்கத் துறையிடம் தெரிவிக்கப்படும்.
கடந்த, 2016ல், இந்தியாவும், சீனாவும், முறையே, 3.21 கோடி டாலர் மற்றும், 1.63 கோடி டாலர் மதிப்பிலான, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளாஞ்சுகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|