பதிவு செய்த நாள்
23 மார்2018
02:30
சென்னை : காய்கறி சந்தையில் பட்டாணி ஏறுமுகத்தில் செல்ல, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில், சில வாரங்களுக்கு முன், 1 கிலோ பட்டாணி, 30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்தரிக்காய் விலை, 1 கிலோ, 10 ரூபாயாக குறைந்து உள்ளது. அதே போல், முட்டைக்கோசும், 7 ரூபாயாகியுள்ளது. ஆந்திராவில் இருந்து வந்துள்ள, காலிபிளவர், சென்னை புறநகர் பகுதிகளில், 1 பூ, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
காய்கறி சந்தையில், 1 கிலோ காலிபிளவர், 25 ரூபாயாக உள்ளது. மொத்த விலை கடைகளில், 1 கிலோ தக்காளி, 12 ரூபாயாக உள்ளது. சில்லரை விற்பனையில், 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முள்ளங்கி, சுரைக்காய், சாம்பார் வெங்காயம், 1 கிலோ, 10 ரூபாயாக உள்ளது. பீட்ரூட், 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது.‘கோடையுடன், அடுத்த மாதம் திருமண சீசனும் துவங்கும். அப்போது காய்கறி விலை அதிகரிக்கும்’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|