பதிவு செய்த நாள்
23 மார்2018
10:03
மும்பை : அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் நெருக்கடி நிலையில் சிக்கி உள்ளன.
இதன் எதிரொலியாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 23) இந்திய கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. நிப்டி 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. சிறிது நேரத்தில் சென்செக்ஸ் சிறிதளவு உயர்ந்தது.
காலை 9.19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 365.35 புள்ளிகள் சரிந்து 32,640.92 புள்ளிகளாகவும், நிப்டி 115.65 புள்ளிகள் சரிந்து 9999.15 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை சரிந்துள்ளன. கெயில் நிறுவன பங்கு மட்டுமே உயர்வுடன் காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|