பதிவு செய்த நாள்
24 மார்2018
00:41
மும்பை : கடந்த ஆண்டு, நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளன.
இது குறித்து, ‘எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017ல், நிறுவனங்கள் இடையே இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பாக, 1,022 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதேசமயம், இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு, முந்தைய ஆண்டை விட, 12 சதவீதம் குறைந்து, 4,680 கோடி டாலர்களாக உள்ளது.
உள்நாட்டில், தொலை தொடர்பு, சில்லரை விற்பனை, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளில், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களை கையகப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 50 லட்சம் டாலருக்கு மேற்பட்ட மதிப்பிலான ஒப்பந்தங்கள் எண்ணிக்கை, 21லிருந்து, 13ஆகக் குறைந்துள்ளது.
அதேசமயம், மிகப் பெரிய நிறுவனங்களின் கையகப்படுத்தும் நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு அமைப்புகளின் தீவிர விசாரணை, கடுமையான விதிமுறைகள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றால் தாமதமாகியுள்ளன. நடப்பாண்டு, உள்நாட்டில், நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல பெரிய நிறுவனங்கள், பிற துறைகளில் கால் பதிக்கவும், விரிவாக்கம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பரவலாகி வரும் மின்னணு பரிவர்த்தனைகள், இந்த வளர்ச்சிக்கு உதவும். இந்தாண்டு, பொருளாதார சூழல் நிலையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், உள்நாட்டில், இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகம் இருக்கும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|