பதிவு செய்த நாள்
07 ஏப்2018
00:45
சென்னை:கர்நாடகா தண்ணீர் தருவதில் பிரச்னை செய்தாலும், மாதுளையில் தாராளம் காட்டுவதால், கோயம்பேடு பழ சந்தையில் மாதுளை வரத்து அதிகரித்துள்ளது.சென்னை கோயம்பேடு பழ சந்தையில், பெங்களூரில் இருந்து அதிகளவில் மாதுளை இறக்குமதியாகிறது. தற்போது, 10 கிலோ மாதுளை, 850 – 1,300 ரூபாய் வரை விற்பனையாகிறது.பண்ருட்டியில் இருந்து வரும் பலாப்பழம், 1 கிலோ, 35 – 50 ரூபாயாக உள்ளது. கேரளாவில் இருந்து வரும் பலாப்பழம், 1 கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.நாக்பூரிலிருந்து வரும் கமலா ஆரஞ்ச், 1 கிலோ, 72 ரூபாயாக உள்ளது. திராட்சை, வாஷிங்டன் ஆப்பிள் போன்றவை கடந்த வார விலை நிலவரத்திலேயே விற்பனையாகின்றன.தொடர், ‘ஸ்டிரைக்’கால் கொள்முதல் குறைந்து, காய்கறி வகைகள் முந்தையை விலையிலேயே விற்பனையாகின. இதில் அதிகம் வாங்கப்படும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை கிலோவுக்கு 2 – 3 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|