பதிவு செய்த நாள்
18 ஏப்2018
00:18
புதுடில்லி : ‘‘அமெரிக்கா தொடர்பான அனைத்து வர்த்தக பிரச்னைகள் குறித்தும் பேசி தீர்வு காணப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்கா உடனான இந்தியாவின் நல்லுறவு, பன்முகத் தன்மையுடன், பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக, தனிச்சிறப்புடன் விளங்குகிறது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக, அமெரிக்கா உள்ளது. இத்தகைய சூழலில், ஒரு சில முடிவுகளை, அமெரிக்கா தன்னிச்சையாக எடுத்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி மானியம் குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டுள்ளது. இந்தியாவின், 3,600 பொருட்களுக்கு வழங்கப்படும், வரி விலக்கு சலுகையை, மறுபரிசீலனை செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் பேசி வருகிறோம். அதில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. உருக்கு, அலுமினியத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, நம்மை பாதிக்காது. ஏனெனில், மிகக் குறைந்த அளவிற்கே அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|