80 லட்சம் வேலைவாய்ப்பை இந்தியா உருவாக்க வேண்டும்80 லட்சம் வேலைவாய்ப்பை இந்தியா உருவாக்க வேண்டும் ... அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு ...
அதிக ஊதியம் அளிப்பதில் மருந்து துறை முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2018
00:21

புதுடில்லி : நாட்­டி­லேயே, மருந்து மற்­றும் ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­களில் தான், வல்­லு­னர்­க­ளுக்கு அதிக,ஊதி­யம் வழங்­கப்­ப­டு­வ­தாக, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

ரான்ஸ்­டாட் இந்­தியா நிறு­வ­னத்­தின் ஆய்­வுப் பிரி­வான, ரான்ஸ்­டாட் இன்­சைட்ஸ், 20 துறை­களில், 15 பிரி­வு­க­ளைச் சேர்ந்த, 1 லட்­சம் வல்­லு­னர்­க­ளுக்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் ஊதி­யம் குறித்து ஆய்வு செய்து வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில், மருந்து துறை­யில் ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு பிரி­வில், அதிக வல்­லு­னர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர்.

மருத்துவர்கள்:
அது­போல, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யில், சிறப்பு சிகிச்­சைக்­கான மருத்­து­வர்­களின் தேவை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக, மருந்து மற்­றும் ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­களில், வல்­லு­னர்­க­ளுக்கு அதிக ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. ஒரு சில சிறப்பு நோய் சிகிச்சை மருத்­து­வர்­க­ளுக்கு, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 18.40 லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, நிறு­வ­னங்­கள் கணக்கு தாக்­கல் செய்­வது அதி­க­ரித்­துள்­ளது. இத்­த­கைய சேவை­க­ளுக்­கான வல்­லு­னர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு பிர­கா­ச­மாக உள்­ளது. சேவை­கள் துறை நிறு­வ­னங்­கள், வல்­லு­ன­ருக்கு, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 9.40 லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்­கு­கின்றன.

அதிக ஊதி­யம் வழங்­கு­வ­தில், நுகர்ப்­பொ­ருள் நிறு­வ­னங்­கள், மூன்­றா­வது இடத்­தில் உள்ளன. இவை, ஒரு வல்­லு­ன­ருக்கு ஊதி­ய­மாக, ஆண்­டொன்­றுக்கு, சரா­ச­ரி­யாக, 9.20 லட்­சம் ரூபாய் அளிக்­கின்றன.இது, ஐ.டி., மற்­றும் ரியல் எஸ்­டேட் துறை­களில், முறையே, 9.10 லட்­சம் ரூபாய் மற்­றும், 9 லட்­சம் ரூபா­யாக உள்­ளது.

பெங்களூரு நம்பர் – 1:
வல்­லு­னர்­க­ளுக்கு அதிக ஊதி­யம் வழங்­கும் நக­ரங்­களில், பெங்களூரு முத­லி­டத்­தில் உள்­ளது. இங்கு, ஒரு வல்­லு­ன­ருக்கு, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 10.80 லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இரண்­டா­வது இடத்­தில், புனே உள்­ளது. இந்­ந­க­ரில், சரா­ச­ரி­யாக, 10.30 லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

தேசிய தலை­ந­கர் பிராந்­தி­யம் மற்­றும் மும்பை ஆகி­யவை, முறையே, 9.90 லட்­சம் ரூபாய் மற்­றும் 9.20 லட்­சம் ரூபா­யு­டன், அடுத்த இடங்­களில் உள்ளன. சென்னை நக­ரம், ஐந்­தா­வது இடத்தை பிடித்­துள்­ளது. இங்­குள்ள நிறு­வ­னங்­கள், வல்­லு­னர்­களின் ஊதி­யத்­திற்கு, சரா­ச­ரி­யாக, 8 லட்­சம் ரூபாய் செல­வி­டு­கின்றன.

ஐத­ரா­பாத், கோல்­கட்டா நக­ரங்­களில், வல்­லு­னர்­க­ளுக்கு, முறையே, 7.90 லட்­சம் ரூபாய் மற்­றும் 7.20 லட்­சம் ரூபாய் என்ற அள­வில், சரா­சரி ஊதி­யம் கிடைக்­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இதர துறைகள்:
கட்­டட வடி­வ­மைப்­பா­ளர்­கள், திட்ட பொறி­யா­ளர்­கள், ‘பிளாக்­செ­யின்’ தொழில்­நுட்ப வல்­லு­னர்­க­ளுக்கு, முறையே, ஆண்டுக்கு, 15.10 லட்­சம்; 14.8 லட்­சம் மற்­றும் 14.௬ லட்­சம் ரூபாய் ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.
-ரான்ஸ்டட் இன்சைட்ஸ் ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)