பதிவு செய்த நாள்
23 ஏப்2018
00:51
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அதாவது, 1 பேரல், 69.56 டாலர் என்ற நிலையை எட்டியது. இந்த உயர்வு, 2016ம் ஆண்டுக்கு பின் வந்த உயர்வாகும்.‘ஒபெக்’ மற்றும், ‘நான் ஒபெக்’ நாடுகளின் ஒப்பந்தப்படி, சந்தையில் மொத்த உற்பத்தியை, 1.8 மில்லியன் பேரல் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், அதை மேற்பார்வையிட, ஒரு குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதில் சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் உலகின் உற்பத்தி நாடுகள் தர வரிசையில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வகிக்கும் நாடுகளாகும். இருப்பினும், சில உறுப்பு நாடுகள், ஒப்பந்தப்படி உற்பத்தி குறைப்பில் ஈடுபடவில்லை. ஆனால், பெரும்பாலான உறுப்பு நாடுகள் இதை ஆதரித்து செயல்படுத்தி வந்தன.கடந்த மார்ச் மாதம், உற்பத்தி ஒப்பந்த அளவை விடவும் குறைவாக, உற்பத்தியை குறைத்ததே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமாகும். கடந்த வெள்ளியன்று நடந்த மேற்பார்வை குழு கூட்டத்தில், இதை தொடர அனைத்து நாடுகளும் விருப்பம் தெரிவித்தன.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள இந்த ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகவல் வெளிவந்தவுடன், விலையேற்றம் காணப்பட்டது. நம் உள்நாட்டு சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை, நான்கு ஆண்டுகள் உச்சத்தை எட்டியது. நம் நாட்டின் மொத்த தேவையில், 80 சதவீத எண்ணெய், இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகளவில் உயர்ந்தது.இந்நிலையில், கச்சா எண்ணெய் தேவை குறையாமல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாகன விற்பனை எல்லா ஆண்டுகளும் அதிகரித்து வருவது, இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், தொழிற்சாலைகளுக்கு கச்சா எண்ணெய் அதிகளவில் உபயோகப்படுகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,415 4,300 4,630 4,800என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 67.00 65.80 70.00 72.70
தங்கம், வெள்ளி:
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரம் அதிகரித்து, வர்த்தகம் நடைபெற்றது. சிரியா நாட்டின் மீதான தாக்குதல் குறித்து, உலக நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்ததால் ஏற்பட்ட அசாதாரண சூழல், விலை உயர்வுக்கு காரணமாகியது. சிரியா போர் சூழல் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் முதலீடுகளை தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
கடந்த வாரத்தில், திங்கள் முதல் புதன் வரை தங்கம் விலை உயர்ந்து, சர்வதேச சந்தையில், 1 அவுன்ஸ், 1,369 டாலர் என்ற நிலையை அடைந்தது. பின், வியாழன் அன்று மட்டும், 33 டாலர் அளவுக்கு சரிவு நேர்ந்தது. மீண்டும் வெள்ளியன்று விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது.நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, விலை அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. மேலும், உலகின் மிகப் பெரிய தங்க மூதலீடான, எஸ்.பி.டி.ஆர்., – இ.டி.எப்., கடந்த வியாழன் வரை, அதன் இருப்பு, 0.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 865.89 டன் ஆனது.
உலகளவில் தங்கம் இறக்குமதியில், இந்தியா முன்னணி நாடாகும். ஆபரண தேவைக்காகவே, இந்தியாவில் தங்கம் பெருமளவு நுகரப்படுகிறது. நடப்பு ஆண்டின் துவக்கம் முதல், கடந்த மூன்று மாதங்களாக, இறக்குமதியில் தொய்வு காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இருப்பினும், வெள்ளி இறக்குமதி, கடந்த மார்ச் மாதத்தில், 31 சதவீதம் மதிப்பு அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி ஆபரணத் தேவைக்காக மட்டும் அல்லாமல், தொழிற்சாலை மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மூலப்பொருளாக அதிகளவில் உபயோகிக்கப்படுவதே இதற்கு காரணம்.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,750 30,520 31,240 31,570காம்எக்ஸ் (டாலர்) 1,332 1,325 1,352 1,368
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,400 37,970 39,200 39,710காம்எக்ஸ் (டாலர்) 16.25 16.00 16.75 17.05
செம்பு:
செம்பு விலை, கடந்த நான்கு வாரங்களாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல், இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது ஆகியவை காரணமாக, இறக்குமதி குறைந்தது.இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அலுமினியம் விலை, ஐந்தாண்டு உச்சத்தை தொட்டு, 1 கிலோ, 180 ரூபாய் வரை அதிகரித்தது.
இதையடுத்து, அனைத்து தொழிற்சாலை கனிமங்களும் விலையேற்றம் கண்டன. செம்பு மற்றும் அலுமினியம் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டவை என்பதால், மின் உபகரணங்கள் மற்றும் கேபிள் தயாரிப்புக்கு அதிகம் நுகரப்படுகின்றன.மேலும், வரும் காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற கோணத்திலும், செம்பு விலை உயர்ந்து வருகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 451.50 446.00 462.00 473.00
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|