பதிவு செய்த நாள்
24 ஏப்2018
03:34
புதுடில்லி, ஏப். 24–மொபைல்போனில் பங்கு வர்த்தகம் மேற்கொள்ள, கைரேகை, கண் விழி பதிவு போன்றவற்றை அறிமுகப்படுத்த, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ திட்டமிட்டுள்ளது.‘சைபர் கிரைம்’ எனப்படும் கணினி மோசடிகளால் ஏராளமானோர், பல வகையில் பணத்தை இழக்கின்றனர். பங்கு வர்த்தகத்தில் அதுபோன்ற மோசடிகள் நிகழா வண்ணம், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், புதிய விதிமுறைகளை ‘செபி’ உருவாக்கியுள்ளது.இதன்படி, மொபைல்போன், ‘டேப்லெட்’ ஆகிய சாதனங்களில், பங்கு வர்த்தகம் மேற்கொள்ள, முதலீட்டாளர்கள், கைரேகை மற்றும் கண்விழிப் படலத்தை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும். அதன் பின்னரே, பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும்.இதனால், ஒரு நபரின் கணக்கில், அவரை தவிர வேறு நபர், பங்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. இத்துடன், மேலும் சில பாதுகாப்பு அம்சங்கள் குறித்து,பங்குத் தரகு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் ‘செபி’ கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், பங்கு வர்த்தகம் தொடர்பான புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, அமலுக்கு வரும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|