பதிவு செய்த நாள்
03 மே2018
00:12
புதுடில்லி:கடந்த ஏப்ரலில், அதிக அளவில் புதிய, ‘ஆர்டர்’ களும், தேவையும் அதிகரித்ததால், நாட்டின் தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளது.இது குறித்து, நிக்கி – மார்கிட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறை வளர்ச்சியைக் குறிக்கும்,
என்.ஐ.எம்.பி.எம்.ஐ., குறியீடு, ஏப்ரலில், 51.6 புள்ளியாக அதிகரித்துள்ளது. இது, மார்ச்சில், 51 புள்ளியாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியைக் குறிக்கும். இந்த வகையில், நாட்டின் தயாரிப்பு துறை, தொடர்ந்து ஒன்பது மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.விலை உயர்வுஏப்ரலில், பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது. அதற்கேற்ப, தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அதிக அளவில், புதிய ஆர்டர்கள் குவிந்தன.
சில்லரை பணவீக்கம், இரண்டாவது மாதமாக குறைந்து இருந்தது. கடந்த ஆண்டு, ஜூலை, செப்., முதல், மூலப்பொருட்கள் விலை, சொற்பமாக உயர்ந்து வருகிறது. அதே அளவில், பொருட்கள் விலையும் உயர்ந்துஉள்ளது.தயாரிப்பு துறையில், மூன்று முக்கிய பிரிவுகளில், நுகர்வோர் சாதனங்கள் பிரிவு மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய ஆர்டர்களால், இப்பிரிவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
நிறுவனங்கள், மூலப் பொருட்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ளன.வட்டி குறையவில்லைஅதேசமயம், இயந்திரங்கள் உள்ளிட்ட, முதலீட்டு சாதனங்கள் பிரிவின் வளர்ச்சி சரிவடைந்துள்ளது. இப்பிரிவில், உற்பத்தி மட்டுமின்றி, புதிய ஆர்டர்கள் வரத்தும், ஏப்ரலில் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், வர்த்தகம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துஉள்ளது.
அடுத்த ஓராண்டில், பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என, நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதன் விளைவாக, புதிய ஆர்டர்கள் குவியும் என, நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, ஜூன், 6ல் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், 'ரெப்போ' வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018- – 19ம் நிதியாண்டின், முதல் நிதிக் கொள்கை அறிவிப்பை, ஏப்., 6ல் வெளியிட்டது. அதில், வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும், 'ரெப்போ' வட்டி, மாற்றமின்றி, 6 சதவீதமாக தொடரும் என, தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், தொடர்ந்து நான்கு முறை வெளியான ரிசர்வ் நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டிகுறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டின், முதல் காலாண்டில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி வலுவாக இருந்தது. எனினும், மார்ச்சில், வளர்ச்சி விகிதம், முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்து காணப்பட்டது. ஆனால், ஏப்ரலில், தேவை அதிகரித்ததால், வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.
ஆஷ்னா தோதியா பொருளாதார நிபுணர்,
ஐ.எஸ்.எஸ்.மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|