பதிவு செய்த நாள்
08 மே2018
02:48
புதுடில்லி:மூலப் பொருட்கள் விலை உயர்வால், ‘டிவி, ஏசி, பிரிஜ்’ ஆகியவற்றின் விலையை, ஜூலை முதல், 10 – 15 சதவீதம் உயர்த்த, தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இதன்படி, 12,000 – 15,000 ரூபாய்க்கு கிடைக்கும், 32 அங்குல டிவி விலையில், 1,200 – 1,500 ரூபாய் வரை உயரும் என, தெரிகிறது.
இது குறித்து, இத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:‘டிவி, ஏசி’ போன்ற நுகர்வோர் சாதனங்களுக்கு, 18 சதவீதமாக இருந்த வரி, கடந்த ஆண்டு, ஜி.எஸ்.டி., அமலான பின், 28 சதவீதமாக உயர்ந்து விட்டது. இதை குறைக்க, கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனால், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை வளர்ச்சி, மே, ஜூன் மாதங்களில், 4 – 7 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஜி.எஸ்.டி., அமலுக்கு வருவதற்கு முன், இதே மாதங்களில், 30 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது.இந்நிலையில், மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, டிவி, ஏசி, பிரிஜ் உள்ளிட்ட சாதனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|