பதிவு செய்த நாள்
11 மே2018
00:46
மும்பை:‘‘பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தின் பங்குகளை வாங்க, பல நிறுவனங்கள் ஆர்வமுடம் விண்ணப்பித்து வருகின்றன,’’ என, விமான போக்குவரத்து துறை செயலர், ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:ஏர் – இந்தியாவின், 76 சதவீத பங்கு விற்பனையில் பங்கேற்க, பல நிறுவனங்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளன. அவற்றில், அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் இல்லை.இம்மாதம், 31ம் தேதி வரை, பங்கு விற்பனையில் பங்கேற்க, நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
அதன் பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏலத்தில் பங்கேற்க தகுதி உடைய நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அந்த நிறுவனங்களின் பெயர்கள், ஜூன் 15ல் அறிவிக்கப்படும்.ஏர் – இந்தியாவின் துணை நிறுவனங்களான, ஏர் – இந்தியா எக்ஸ்பிரஸ், ஏ.ஐ.எஸ்.ஏ.டி.எஸ்., ஆகியவற்றின் பங்குகளும் விற்பனை செய்யப்படும்.பங்கு விற்பனைக்கு பின், ஏர் – இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 24 சதவீதமாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏர் – இந்தியா நிறுவனம், 57 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|