பதிவு செய்த நாள்
15 மே2018
02:43
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, இந்தாண்டு இறுதி முதல், உயர்த்தக் கூடும்’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களிடம் பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. தனியார் துறையில், முதலீடுகள், விரிவாக்கத் திட்டங்கள் அதிகரித்துள்ளன.அதனால், இந்தாண்டின் பிற்பாதியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முழுவீச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்.இதன் காரணமாக, அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலாண்டில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தும் என, தெரிகிறது.கடந்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.4 சதவீதமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரம், மந்தநிலையில் இருந்து மீண்டு, வளர்ச்சிக்கு திரும்பி வருவதால், இந்தாண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதம்; 2019ல், 7.7 சதவீதமாக அதிகரிக்கும்.
அதற்கு ஏற்ப, ரிசர்வ் வங்கி, இந்தாண்டு இறுதி முதல், அடுத்த ஆண்டு வரை, ‘ரெப்போ’ வட்டியை, தலா, 0.25 சதவீதம் என்ற அளவில், மூன்று முறை உயர்த்தி, 6.75 சதவீதம் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|