பதிவு செய்த நாள்
16 மே2018
00:40
திருப்பூர்:மாங்காய் பழுக்க வைக்க, ரசாயன, ‘ஸ்ப்ரே’ அடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும், மாம்பழ சீசன் துவங்கியுள்ளது. மாங்காய்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ரசாயன, ‘கார்பைட்’ கற்களை பயன்படுத்தி, ஒரே நாளில் பழுக்க வைக்கின்றனர்.இத்தகைய மாம்பழங்களை சாப்பிடுவோருக்கு, கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும். இப்படி செயற்கையாக பழுத்த மாம்பழங்களை, அதிகாரிகள் எளிதில் கண்டுபிடிப்பதால், வேறு வழிமுறைகளை வியாபாரிகள் கையாள்கின்றனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:‘கார்பைட்’ கற்களை பயன்படுத்தி, மாங்காயை பழுக்க வைத்தால் எளிதாக கண்டறியலாம். வழக்கமான, மாம்பழ வாசனை இருக்காது. குறைவாக இருக்கும்.இயற்கையாக பழுப்பது போல், சீராக பழுக்காது. பழத்தின் ஒரு பகுதி கனிந்தும், மற்றொரு பகுதி காயாகவும் இருக்கும்.
இதை கண்டுபிடித்து விடுவதால், வியாபாரிகள் வேறு வழிமுறையை கையாளுகின்றனர். மாங்காய்களை பார்சல் செய்யும் போதே, ‘எத்திபான்’ என்னும் ரசாயன ‘ஸ்ப்ரே’ அடித்து விடுகின்றனர். இத்தகைய மாம்பழங்களிலும், மணம் குறைவாக இருக்கும்.வெளிர் ரோஸ் நிறத்தில், லேசான படலம் படர்ந்தது போல் இருக்கும். எனவே, மாம்பழம் வாங்குவோர் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இயற்கைக்கு மாறான விதத்தில், பழுத்த பழங்களை உண்டால், உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். தவறான வழிமுறையில் பழத்தை பழுக்க வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|