பதிவு செய்த நாள்
24 மே2018
00:22
புதுடில்லி : மொரீஷியசைச் சேர்ந்த, ஆப்ரேஷியா வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில் தற்போது, 119 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியாவில் கூடுதலாக, 238 பெருங்கோடீஸ்வரர்கள் உருவாவர். இது, சீனாவில், 448 ஆக இருக்கும்.
அமெரிக்காவில், அதிகபட்சம், 884 பெருங்கோடீஸ்வரர்கள் இருப்பர். சீனா, 697 பேருடன், இரண்டாவது இடத்தை பிடிக்கும். இந்தியா, 357 பேருடன், மூன்றாவது இடத்தில் இருக்கும். 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்து உள்ளோர், பெருங்கோடீஸ்வரர் பிரிவில் அடங்குவர். இது, இந்திய ரூபாய் மதிப்பில், 6,800 கோடியாகும்.
வரும், 2027ல், ரஷ்யாவில், 142 பெருங்கோடீஸ்வரர்கள் உருவாவர். இது, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஹாங்காங்கில் முறையே, 113, 90 மற்றும், 78 ஆக இருக்கும்.உலகளவில் தற்போது, 2,252 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது, அடுத்த, 10 ஆண்டு களில், 3,444 ஆக அதிகரிக்கும்.
தனி நபர் சொத்து மதிப்பில், இந்தியா, 8.23 லட்சம் கோடி டாலருடன், ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|