இந்தியாவில் அதிகரிக்கும் பெருங்கோடீஸ்வரர்கள்இந்தியாவில் அதிகரிக்கும் பெருங்கோடீஸ்வரர்கள் ... ‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம் ‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம் ...
ரியல் எஸ்டேட்டில் அதிகரித்த தனியார் பங்கு முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
00:23

புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறை­யில், சில்­லரை விற்­பனை பிரி­வில், மூன்று ஆண்­டு­களில், தனி­யார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்­களின் முத­லீடு, 5,500 கோடி ரூபாய் என்ற அளவை எட்­டி­யுள்­ளது.

இது குறித்து, ரியல் எஸ்­டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜே.எல்.எல்., இந்­தியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ரியல் எஸ்­டேட் துறை­யில், சில்­லரை விற்­பனை பிரி­வில், 2015 – 18 மார்ச் வரை­யி­லான காலத்­தில், தனி­யார் பங்கு முத­லீடு, 5,500 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

குறிப்­பாக, வணிக வளா­கங்­களில், ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது. அத­னால், பல கட்­டு­மான நிறு­வ­னங்­கள், வணிக வளாக திட்­டங்­களில் ஆர்­வம் காட்­டு­வது அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வகை வளா­கங்­க­ளுக்கு, மக்­கள் அதி­கம் கூடும் இடங்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்றன. அத்­து­டன், கவர்ச்­சி­க­ர­மான வளாக வடி­வ­மைப்பு, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கின்றன.

இத்­த­கைய அம்­சங்­களில் பின்­தங்­கி­யுள்ள வணிக வளா­கங்­களில், பல கடை­கள் காலி­யாக உள்ளன. அத்­த­கைய இடங்­களில், சிறிய அலு­வ­ல­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், கல்வி மையங்­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு கூடங்­கள் ஆகி­யவை அமைக்­கப்­ப­டு­கின்றன. மேம்­பட்ட தரத்­தி­லான வணிக வளா­கங்­களில், சரா­ச­ரி­யாக, 8 சத­வீத அள­விற்கே, கடை­கள் விற்­ப­னை­யா­கா­மல் உள்ளன.

வசதி குறை­வான, மோச­மான பரா­ம­ரிப்­பில் உள்ள வணிக வளா­கங்­களில், காலி­யி­டங்­கள், 40 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளன. எதிர்­கா­லத்­தில், இது போன்ற வளா­கங்­கள், ‘பிராண்டு’ நிறு­வ­னங்­களின் ஆத­ரவை இழக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சில்­லரை விற்­பனையில்..
சமீ­ப­கா­லத்­தில் இல்­லாத வகை­யில், ரியல் எஸ்­டேட் சில்­லரை விற்­பனை பிரி­வில், இந்­தாண்டு, ஜனவரி – மார்ச் காலாண்­டில், 1,000 கோடி ரூபாய் தனி­யார் பங்கு முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ளது. அதில், பெங்­க­ளூ­ரில், ‘எல் அண்ட் டி’ நிறு­வ­னத்­தின் நிலம், 650 கோடி ரூபாய்க்கு, போனிக்ஸ், சி.பி.பி.ஐ.பி., நிறு­வ­னங்­க­ளுக்கு கைமா­றி­ய­தும் அடங்­கும். இது தவிர, நிதே­ஷின், புனே வணிக வளா­கத்­தில், 300 கோடி ரூபாய் முத­லீட்­டில், 85 சத­வீத பங்­கு­கள் வாங்­கப்­பட்­டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)