பதிவு செய்த நாள்
24 மே2018
00:24
மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ நடைமுறைக்கு வந்த பின், சரக்குகளை கொண்டு செல்ல, ‘பில்’ இல்லையெனில், வரியுடன், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெறும், இ – வே பில் நடைமுறை, நாடு முழுவதும், ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது. மாநிலத்துக்கு உள்ளேயே, சரக்குகளை எடுத்துச் செல்ல, இ –வே பில் பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜூன் 2ம் தேதி முதல் மாநிலத்துக்குள், இ – வே பில் நடைமுறைக்கு வருகிறது. இதன் பின், இ – வே பில் இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் மாதத்துக்குப் பின், மாநிலத்துக்குள்ளே அல்லது மாநிலங்களுக்கிடையே, இ – வே பில் பெறாமல் சரக்குகள் கொண்டு சென்றால், சரக்கின் மதிப்புக்கேற்ற வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இ – வே பில்லில் சிறிய தவறுகள் இருந்தால், தவறுகளுக்கேற்ப, 20 ஆயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும். வரியும், அபராதமும் செலுத்திய பின் தான், வாகனங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். சென்னையில் சரக்கு வாகனங்களை கண்காணிக்க, 20 ரோந்து படைகளும், மாவட்டத்துக்கு ஒரு ரோந்து படையும் பணியில் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|