பதிவு செய்த நாள்
25 மே2018
00:19
இந்தியாவில், இன்டர்நெட் தொலைபேசியை, பி.எஸ்.என்.எல்., விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில், ‘இன்டர்நெட் லேண்ட்லைன்’ சேவைக்கு, இதுவரை அனுமதி இல்லை. தற்போது, முதல் முறையாக, பி.எஸ்.என்.எல்., இந்த சேவையை துவங்க உள்ளது. இதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சேவை துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதை தவிர, பல்வேறு சேவைகளை துவங்க, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ‘எம் டூ எம்’ என்ற சிம் கார்டு சேவை நடைமுறைக்கு வர உள்ளது. ‘மெஷின் டூ மெஷின்’ என்ற இந்த சேவையில், குறிப்பிட்ட பொருளில், பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு பொருத்துவதன் மூலம், மனித குறுக்கீடு இல்லாமல், ‘ரிமோட்’ மூலம் அவற்றை இயக்க முடியும்.
இந்த சிம் கார்டை காரில் பொருத்தினால், அதன் செயல்பாடுகள், அந்த கார் எங்கே உள்ளது போன்ற பல்வேறு தகவல்களை பெற முடியும். ஏற்கனவே இந்த சிம் பரிசோதனையில் உள்ளது; விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|