பதிவு செய்த நாள்
26 மே2018
00:31
புதுடில்லி: சரக்கு போக்குவரத்து துறையில், அடுத்த நான்கு ஆண்டுகளில், புதிதாக, 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ‘டீம் லீஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., அமலாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக அதிக அளவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் போன்றவற்றால், சரக்கு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.தற்போது, சாலை, ரயில், விமானம், நீர்வழிப் பாதை, கிடங்குகள், பேக்கிங் மற்றும் கூரியர் சேவைகள் சார்ந்த சரக்கு போக்குவரத்து மூலம், 1.௦9 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது, அடுத்த நான்கு ஆண்டுகளில் உருவாகும், 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மூலம், 1.39 கோடியாக அதிகரிக்கும். சாலை வழி சரக்கு போக்குவரத்தில், 18.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ரயில்வேயில், 40 ஆயிரம்; விமான துறையில், நான்கு லட்சம்; நீர்வழி தடத்தில், 4.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். சரக்கு போக்குவரத்தை, அடிப்படை கட்டமைப்பு துறையில் சேர்த்ததும், அத்துறை சார்ந்த திட்டங்களுக்கு, ஆறு லட்சம் கோடி ரூபாய் அரசு ஒதுக்குவதாலும், புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|