சாலை விபத்து காப்பீடு ரூ.5 லட்சமாக நிர்ணயம்சாலை விபத்து காப்பீடு ரூ.5 லட்சமாக நிர்ணயம் ... ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள் ...
தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம்: டிராய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2018
00:26

புதுடில்லி : மொபைல்­போ­னில், தேவை­யற்ற அழைப்­பு­கள், ‘எஸ்.எம்.எஸ்.,’ஆகி­ய­வற்றை தடுக்க, தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், ‘பிளாக்செயின்’ தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான விதி­மு­றை­க­ளைக் கொண்ட, வரைவு அறிக்­கையை, 'டிராய்' எனப்­படும் தொலை­தொ­டர்பு ஒழுங்­கு­முறை ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

இது குறித்து, ஆணை­யத்­தின் தலை­வர், ஆர்.எஸ்.சர்மா கூறி­ய­தா­வது: ‘பிளாக்செயின்’ தொழில்­நுட்­பம், குறிப்­பிட்ட நப­ருக்கு மட்­டுமே சேவை கிடைப்­பதை உறுதி செய்­கிறது. மேலும், சேவை­யின் ரக­சி­யத்தை காக்­க­வும் உத­வு­கிறது. அத­னால், இந்த தொழில்­நுட்­பத்­தில், பதிவு செய்த சந்­தா­தா­ரர்­களை தவிர, வேறு நப­ருக்கு வணிக ரீதி­யி­லான அழைப்­பு­களை விடுத்து தொல்லை கொடுக்க முடி­யாது.

அது­போல, ‘எஸ்.எம்.எஸ்.,’ எனப்­படும் குறுந்­த­க­வல்­க­ளை­யும் தேவைப்­ப­டு­வோ­ருக்கு மட்­டுமே அனுப்­ப­லாம்; அனை­வ­ருக்­கும் அனுப்ப முடி­யாது. இத்­த­கைய சேவை­க­ளுக்­காக பதிவு செய்­துள்ள சந்­தா­தா­ரர் விப­ரங்­களை அறி­ய­வும், சேவையை வழங்­க­வும், அங்­கீ­கா­ரம் பெற்ற நிறு­வ­னங்­க­ளால் மட்­டுமே முடி­யும்.

அத­னால், அங்­கீ­கா­ர­மற்ற எந்த நிறு­வ­ன­மும், தேவை­யற்ற அழைப்­பு­களை விடுக்­கவோ, குறுந்­த­க­வல்­கள் அனுப்­பவோ முடி­யாது. உல­கி­லேயே, டிராய் அமைப்­பு­தான், இது போன்ற கட்­டுப்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது. இது தொடர்­பான வரை­வ­றிக்கை, பொது­மக்­களின் கருத்து கேட்­புக்­காக, வலை­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஜூன், 11 வரை, கருத்­துக்­களை பதிவு செய்­ய­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மொபைல்­போன் மூலம், பொருட்­கள் மற்­றும் சேவை­களை சந்­தைப்­ப­டுத்­தும், ‘டெலி­மார்க்­கெட்­டிங்’ நிறு­வ­னங்­கள், சந்­தா­தா­ரர் விப­ரங்­களை, தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து பெறு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. இதற்கு, ‘பிளாக்செயின்’ முடிவு கட்­டும். இந்த தொழில்­நுட்­பத்­தில், வர்த்­தக அழைப்­பு­கள், எஸ்.எம்.எஸ்., போன்­ற­வற்­றுக்­காக பதிவு செய்த சந்­தா­தா­ரர்­க­ளுக்கு மட்­டுமே, அத்­த­கைய சேவை­களை நிறு­வ­னங்­க­ளால் வழங்க முடி­யும். பதிவு செய்த நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டுமே, சந்­தா­தா­ரர் தக­வல்­களும், அவர்­க­ளுக்கு அளிக்க வேண்­டிய சேவை­கள் குறித்த விப­ரங்­களும் கிடைக்­கும்.

-எஸ்.கே.குப்தா, செயலர், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)