வாகன தயாரிப்பு துறையில் புதுமை தொழில்நுட்பம்  தேவைவாகன தயாரிப்பு துறையில் புதுமை தொழில்நுட்பம் தேவை ... வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? ...
செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2018
00:32

புதுடில்லி: இரண்டு ஆண்­டுக­ளாக செயல்­ப­டாது, பெய­ர­ள­வில் உள்ள, 3- – 4 லட்­சம் நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்­வது குறித்து, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை அமைச்­ச­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.பலர், பெய­ர­ள­வில் நிறு­வ­னங்­களை பதிவு செய்து, அவற்­றின் மூலம், சட்ட விரோத பணப் பரி­மாற்­றம், வரி ஏய்ப்பு உள்­ளிட்­ட­வற்­றில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.இத்­த­கைய போலி நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்க, மத்­திய அரசு, சிறப்பு குழுவை அமைத்­துஉள்­ளது. இக்­குழு, 16 ஆயி­ரம் நிறு­வ­னங்­கள் போலி­யா­னவை என, அடை­யா­ளம் கண்­டுள்­ளது; 80 ஆயி­ரம் நிறு­வ­னங்­களை, சந்­தேக பட்­டி­ய­லில் சேர்த்­துள்­ளது. இத்­து­டன், பொது இயக்­கு­னர்­க­ளைக் கொண்ட, 17 ஆயி­ரம் போலி நிறு­வ­னங்­களை கண்­டு­பி­டித்­துள்­ளது.இந்­நி­லை­யில், நிறு­வ­னச்சட்­டப்­படி, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக, நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யா­ம­லும், எவ்­வி­த­மான வர்த்­த­கம் புரி­யா­ம­லும் உள்ள நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.
இது குறித்து மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:கடந்த, 2017 டிசம்­பர் நில­வ­ரப்­படி, 17 லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள், மத்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன; இவற்­றில், 11.4௦ லட்­சம் நிறு­வ­னங்­கள், செயல்­பாட்­டில் உள்­ளன. அவற்­றில், இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட ஆண்­டு­கள் செயல்­ப­டாத நிறு­வ­னங்­களும் அடங்­கி ­உள்­ளன. இந்­நி­லை­யில், குறைந்­த­பட்­சம் இரண்டு ஆண்­டு­க­ளாக வர்த்­த­கம் புரி­யா­மல், நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யா­மல் உள்ள, 25 – -30 சத­வீத நிறு­வ­னங்­கள் களை­யெ­டுக்­கப்­படும் என, தெரி­கிறது.அவை, மத்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­லக பதிவு பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­ட­லாம். இந்த வகை­யில், 3 -– 4 லட்­சம் போலி நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­படும் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கிறது.ஏற்­க­னவே, இது­போன்ற கார­ணங்­க­ளுக்­காக, 2.25 லட்­சம் போலி நிறு­வ­னங்­க­ளின் பதிவு நீக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பாயும் நடவடிக்கை : l இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல் வர்த்­த­கம் புரி­யா­மல் அல்­லது நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யாத நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­படும்l அதற்கு முன், அந்த நிறு­வ­னங்­கள் மற்­றும் அவற்­றின் இயக்­கு­னர்­க­ளுக்கு, 30 நாட்­க­ளுக்­குள் பதில் அளிக்­கு­மாறு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பப்­படும்l மத்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்த ஓராண்­டுக்­குள் தொழில் துவங்­கா­மல் அல்­லது, 180 நாட்­க­ளுக்­குள் பங்கு மூல­த­னம் மேற்­கொள்­ளாத நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்­தா­கும்l தொடர்ந்து இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட ஆண்­டு­கள் வர்த்­த­கம்செய்­யா­மல், நிதி நிலை அறிக்கை வழங்­காத நிறு­வ­னங்­கள், நிறு­வன பதி­வா­ளர் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­படும்l பினாமி நிறு­வ­னங்­கள் மீது, பினாமி தடுப்பு சட்­டத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்l குறைந்த பங்கு மூல­த­னத்­தில், சிறிய அள­வில் வர்த்­த­கம் புரிந்து, சட்ட விரோத பணப் பரி­மாற்­றத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை பாயும்l கறுப்பு பணப் பரி­மாற்­றத்­திற்­காக உரு­வாக்­கப்­படும் போலி நிறு­வ­னங்­களை, களை­யெ­டுக்­கும் பணியை தீவி­ரப்­ப­டுத்த திட்­டம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)