பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
00:12
புதுடில்லி : கோல்கட்டாவைச் சேர்ந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான, ‘அன்மோல் இண்டஸ்ட்ரீஸ்’, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை, இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியுள்ளது. அதில், பங்கு வெளியீட்டின் மூலம், 750 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் தொகை மூலம், வர்த்தகத்தை விரிவுபடுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ. சி.ஐ., செக்யூரிட்டிஸ், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள், இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன. அன்மோல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, மேற்கு வங்கம் தவிர, உ.பி., பீஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், பிஸ்கட் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.
அவை, ஆண்டுக்கு, 3 லட்சம் டன் பிஸ்கட், 8 ஆயிரம் டன் கேக் வகைகளை தயாரிக்கும் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம், 1.44 லட்சம் டன் பிஸ்கட்டுகள் மற்றும், 2,484 டன் கேக் வகைகளை தயாரித்து, சந்தைப்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|