பதிவு செய்த நாள்
26 ஜூன்2018
01:03
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 12 வங்கிகளில், எம்.டி., எனப்படும் நிர்வாக இயக்குனரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், நடைபெற உள்ளது.
இதுகுறித்து, நிதிச் சேவைகள் துறை செயலர், ராஜிவ் குமார் கூறியதாவது: பி.பி.சர்மா தலைமையிலான வங்கிகள் வாரியம், பொதுத் துறை வங்கிகளில், காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கு, 28ம் தேதி நேர்காணல் நடத்துகிறது. இதில், நடப்பு நிதியாண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கும் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நேர்காணலில், செயல் இயக்குனர்கள், துணை நிர்வாக இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், 34 பேர் கலந்து கொள்ள உள்ளனர். தேனா வங்கி, ஆந்திரா வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி உட்பட, ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கண்காணிப்பு பட்டியலில் உள்ள பெரும்பான்மை வங்கிகளுக்கு, புதிய நிர்வாக இயக்குனர்கள் நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், துணை நிர்வாக இயக்குனர் பதவிக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|