பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:18
புதுடில்லி;‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்கள் சம்பந்தமான வலைதள நிறுவனமான, ‘கிரிப்டோ டாட் காம்’ நிறுவனத்தை, ‘மொனாகோ’ நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான, மேட் பிளேஸ் என்பவர், 1993ல், கிரிப்டோ டாட் காம் நிறுவனத்தை துவங்கினார்.இந்நிறுவனம், மெய்நிகர் நாணயங்களுக்கான வலைதள நிறுவனங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும்.இந்த நிறுவனத்தை வாங்க, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. எனினும், நிறுவனத்தை விற்க, மேட் பிளேசுக்கு விருப்பம் இல்லை.
இந்நிலையில், கிரிப்டோ கரன்சிகளுக்கு டெபிட் கார்டுகள் வழங்கி வரும், மொனாகோ நிறுவனம், கிரிப்டோ டாட் காம் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்காக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.மொனாகோ நிறுவனம், 50 லட்சம் டாலர் – 1 கோடி டாலர் கொடுத்து, கிரிப்டோ டாட் காம் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதையடுத்து, மொனாகோ நிறுவனம் அதன் பெயரை, கிரிப்டோ டாட் காம் என மாற்றிக்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மொனாகோ நிறுவனம், கடந்தாண்டு, ‘விசா’ நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, விசா பிராண்டட் கார்டுகளை விளம்பரம் செய்தது. இது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|