பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:20
நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
அதையடுத்து, 440 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 457, ஐதராபாத், 401, விஜயவாடா, 405, பர்வாலா, 394, மும்பை, 455, மைசூரு, 435, பெங்களூரு, 431, கோல்கட்டா, 462, டில்லி, 412 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 1 கிலோ, 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலை, மாற்றம் செய்யப்படவில்லை.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 1 கிலோ, 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலை, மாற்றம் செய்யப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|