பதிவு செய்த நாள்
11 ஜூலை2018
00:35
சென்னை:தமிழகத்தின், 25 பொதுத் துறை நிறுவனங்கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுவதாக, மத்திய தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில், மொத்தம், 68 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆறு செயல்படாத பொதுத் துறை நிறுவனங்களும் உள்ளன.
39 நிறுவனங்கள் லாபம்
கடந்த, 2017ம் ஆண்டு மார்ச் வரையில், இந்த நிறுவனங்களின் மொத்த விற்பனை வரவு, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 850 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த நஷ்டம், 78 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாகும்.தமிழகத்தில் செயல்படும், 68 பொதுத் துறை நிறுவனங்களில், 39 நிறுவனங்கள், 931.08 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கு கின்றன. 25 நிறுவனங்கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகின்றன.
இதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், 257.53 கோடி; தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாடு நிறுவனம், 129.74 கோடி; டைடல் பார்க் நிறுவனம்,, 49.28 கோடி ரூபாய் என, பல்வேறு நிறுவனங்கள் லாபத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 5,786.82 கோடி ரூபாய், எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள், 3,049.39 கோடி ரூபாய் என, இவை நஷ்டத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், மூன்று நிறுவனங்கள் லாபம் மற்றும் நஷ்டத்தை ஈட்டவில்லை.
வீண் செலவு
செயல்படாத ஆறு நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆறு நிறுவனங்களையும் மூட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கப்பல்களின் மேலாண்மை குறைபாடுகள் காரணமாகவும், சாலைப் பணிக்கு நிலம் கிடைக்க சாத்தியத்தை உறுதி செய்யாததாலும், வீண் செலவு ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ள மேலாண்மை பணிகளை கையாள ஏற்பட்ட தாமதத்தாலும், கட்டப்பட்ட பேருந்துகளை இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், 12 பொதுத் துறை நிறுவனங்களில், 1,766.49 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டுள்ளது.மேலும், மாறுபடும் விலை விகிதத்தின் அடிப்படையில், வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைப் புள்ளிகளை இறுதி செய்யாததால், டான்ஜெட்கோவிற்கு, 746.13 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|