பதிவு செய்த நாள்
12 ஜூலை2018
00:10
சேலம்:பட்டாணி விலை, கிலோவுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தது.இந்தியாவின் பட்டாணிதேவை, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, 60 சதவீதமும்; மீதியை, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களும் பூர்த்தி செய்கின்றன.
கடந்த, 2015ல், அதன் இறக்குமதி அதிகரித்ததால், உரிய விலையின்றி, பட்டாணி பயிரிடும் பரப்பை, விவசாயிகள் குறைத்தனர். அதே நிலை, 2016 – 17ல் தொடர்ந்தது.இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து பட்டாணி இறக்குமதிக்கு, மத்திய அரசு, கடந்த மே மாதம் தடை விதித்தது. இதனால், மார்க்கெட்டில் பட்டாணி விலை, கிலோவுக்கு, ஆறு முதல், 10 ரூபாய் வரை உயர்ந்தது. பின், வெளிநாடுகள் விடுத்த கோரிக்கையால், இறக்குமதி தடையை, மத்திய அரசு விலக்கியது; அதேநேரம், அதற்கான வரியை, 50 சதவீதம் வரை உயர்த்தியது.
இந்நிலையில் நேற்று, பட்டாணி விலை, கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளை பட்டாணி முதல் ரகம் கிலோ, 50க்கு விற்கப்பட்டது, 54 ரூபாய்; இரண்டாம் ரகம், 42க்கு விற்கப்பட்டது, 46 ரூபாய்; பச்சை பட்டாணி முதல் ரகம், 80க்கு விற்கப்பட்டது, 84 ரூபாய்; இரண்டாம் ரகம், 76க்கு விற்கப்பட்டது, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.பட்டாணி பருப்பு முதல் ரகம், கிலோ, 62க்கு விற்கப்பட்டது, 66 ரூபாய்; இரண்டாம் ரகம், 56க்கு விற்கப்பட்டது, 60 ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|