பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:25
புதுடில்லி : மின்னணு வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பழுதான, உடைந்த பொருட்களை அனுப்புவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல்’ போன்ற மின்னணு வணிக நிறுவனங்கள், வலைதளங்கள் வாயிலாக, ‘ஆர்டர்’ பெற்று, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே பொருட்களை அனுப்புகின்றன. அவற்றில் ஏராளமான பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் உள்ளதாக, நுகர்வோர்கள் புகார் தெரிவித்துள்ளதாக, ராஜ்யசபாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மின்னணு நிறுவனங்களால், நுகர்வோர் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். இது குறித்து ஏராளமான புகார்கள், தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு வருகின்றன. அந்த புகார்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு சில நுகர்வோர்களுக்கு, உரிய குறைதீர்ப்பு மையங்களை அணுகுமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|