பதிவு செய்த நாள்
27 ஜூலை2018
19:05
புதுடில்லி:ஐசிஐசிஐ வங்கி, இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் ஒட்டுமொத்த சொத்துக்களின் அடிப்படையில் மிகப்பெரும் வங்கியாக திகழ்கிறது. வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறையில் புதுமையான சேவைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி, தற்போது பிஒஎஸ் எனப்படும் 'பாயிண்ட் ஆஃப் சேல்' 'அப்ளிகேஷனான ஈஸிபே'-ல் இதுவரை இல்லாத புதுமையான அம்சங்களை கூடுதலாக இணைத்திருக்கிறது.
இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்ட போது, வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் வர்த்தக தொழில்ரீதியிலான மக்கள், யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கிகளின் மூலமான இன்டர்நெட் வங்கி, ஆதார் பே, பாரத் க்யூஆர் கோட் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் டிஜிட்டல் வாலெட் 'பாக்கெட்ஸ் ஆகிய பல்வேறு டிஜிட்டல் வழிமுறைகளின் மூலமாக தங்களது கட்டணங்களைப் பெறுவதற்கு வசதியாக 'பாயிண்ட் ஆஃப் சேல்' அப்ளிகேஷனாக 'ஈஸிபே' அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல், ஈஸிபே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, 1.8 லட்சம் வாடிக்கையாளர்களையும் மிக குறுகிய காலத்திலேயே பெற்றிருக்கிறது. ஈஸிபே -ன் மூலம் இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ வங்கியின் 7 லட்சத்திற்கும் அதிகமான நேரடி அலுவலக செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் பிஓஎஸ் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
'ஈஸிபே' மொபைல் அப்ளிகேஷனின் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் அனுப் பக்ஷி கூறுகையில், ''டிஜிட்டல் வாயிலான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு டிஜிட்டல் தீர்வுகளை அளித்து வருவதில் ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்து முன்னோடியாக திகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, நாங்கள் 'ஈஸிபே' என்னும் டிஜிட்டல் பிஓஎஸ் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினோம். இது புரட்சிகரமான மொபைல் அப்ளிகேஷனாக அமைந்தது.
'ஈஸிபே' என்னும் ஒரே மொபைல் அப்ளிகேஷன் மூலம் நாடு முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கட்டணங்களை டிஜிட்டல் முறை மூலம் பெறுவதை சாத்தியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு சந்தையில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஐசிஐசிஐ வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஸிபே மொபைல் அப்ளிகேஷனை தங்களது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும், என்றார்.
தமிழ்நாட்டில் தற்போது 14,000 வர்த்தகர்கள் ஈஸிபே-யுடன் முன்பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த அப்ளிகேஷன், உணவகங்கள், பயணம் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் இதர தொழில் வல்லுநர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|