பதிவு செய்த நாள்
12 ஆக2018
00:04
புதுடில்லி:மத்திய அரசு, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது.
தற்போது, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாத விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், ஒரு மாத விற்பனை விபரங்களை, ஜி.எஸ்.டி.ஆர் – 1 படிவம் மூலம், அடுத்த மாதம், 10ம் தேதிக்குள் தாக்கல் செய்கின்றன.இந்த, ‘கெடு’ நாள், 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாத விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், கடந்த ஜூலை முதல், 2019 மார்ச் வரை, ஒவ்வொரு மாத விற்பனை விபரங்களை, அதற்கடுத்த மாதம், 11ம் தேதிக்குள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யும் பிரிவினர், அதற்கடுத்த மாத இறுதிக்குள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இதன்படி, ஜூலை – செப்டம்பர் வரையிலான விற்பனைக்கு, அக்., 31க்குள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் – டிசம்பர் வரையிலான வர்த்தக விபரங்களை, 2019, ஜன., 31க்குள் அளிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு, ஜனவரி – மார்ச் வரையிலான விற்பனை விபரங்களை, ஏப்., 30க்குள் வழங்க வேண்டும்.ஒரு மாத கொள்முதல், விற்பனை உள்ளிட்ட மொத்த வணிக விபரங்களை, ஜி.எஸ்.டி.ஆர்., –3பி படிவத்தின் கீழ், அதற்கடுத்த மாதம், 20ம் தேதி வரை அளிக்கலாம். இதன்படி, ஜூலை மாத கணக்கை, ஆக., 20க்குள் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|